என் குழந்தை எட்டி உதைக்கிறது…கர்ப்பிணியான நடிகை சமீராரெட்டி வெளியிட்ட நெகிழ்ச்சி புகைப்படம்

பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மெய்னி தில் துஜ்கோ தியா என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.

சினிமாவில் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சியமானார். அதன் பின் அஜித்துடன் அசல் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் சமீரா ரெட்டி நடித்து வந்தார்.

இருப்பினும் முன்னணி நடிகையாக வலம் வர முடியாததால் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார்.

https://www.instagram.com/p/Bv3a_ljnj7o/

திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த சமீரா சினிமாவை விட்டு விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார்.

இந்நிலையில் சமீரா தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார் . சமீபத்தில் தான் கற்பமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் என் குழந்தை எட்டி உதைக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.