ஷில்பா ஷெட்டி விவாகரத்து – குடும்பத்தில் பிரச்சனையை கிளப்பிய இயக்குநர்

தமிழில் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. குஷி படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்தார். தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். 2007-ல் வெளிநாட்டில் பிக்பிரதர் டி.வி. நிகழ்ச்சியில் சக போட்டியாளர்களால் இனவெறிக்கு ஆளாகி பரபரப்பானார். ஷில்பா ஷெட்டிக்கும், தொழில் அதிபர் ராஜ்குந்த்ராவுக்கும் 2009-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண்குழந்தை உள்ளது.

இந்தநிலையில் குடும்ப தகராறில் ராஜ்குந்தராவை ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் பரவி இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னணி நடிகர், நடிகைகள் ஒருவரையொருவர் தொடர்புகொண்டு இது உண்மையா? என்று விசாரித்த வண்ணம் இருந்தார்கள். ஷில்பா ஷெட்டியையும் தொடர்புகொண்டு பேசினர்.

அதன்பிறகு இந்தி டைரக்டர் அனுராக் பாசு இந்த வதந்தியை பரப்பியது தெரியவந்தது. டி.வி. ரியாலிட்டி ஷோ ஒன்றில் ஷில்பா ஷெட்டியும், அனுராக் பாசுவும் நடுவர்களாக உள்ளனர். அந்த நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து அதில் “கணவருடன் சண்டை போட்டு விட்டேன். அவரை விவாகரத்து செய்கிறேன்” என்ற குறிப்பை பதிவு செய்து ஷில்பா ஷெட்டியின் அம்மாவுக்கு அனுராக் பாசு அனுப்பியுள்ளார். அதை பார்த்து ஷில்பாவின் தாய் பதறிப்போய் போன் செய்து பேசியதும் அதனால் இந்த விவாகரத்து வதந்தி பரவியதும் தெரியவந்தது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.