மேடையில் குடும்பத்துடன் அழுத ரோபோ சங்கர்.! அனைவரையும் நெகிழவைத்த வீடியோ.!

ரோபோ சங்கர் இன்று சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார். ஒரு சாதாரண பிண்ணியிலிருந்து திறமையை மட்டுமே நம்பி உயர்ந்திருக்கிறார் என்றால் ஆச்சர்யம் தான்.

கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொடங்கி தற்போது குழந்தைகளுக்கான அதே நிகழ்ச்சிக்கு நடுவராக வருகை தந்திருக்கிறார். மாரி படம் அவருக்கும் பெரும் சிறப்பை கொடுத்தது. அண்மையில் அவர் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் நடித்துவிட்டார்.

அவரின் மனைவி தற்போது கலக்கப்போவது யாரு சீசன் 8 ல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இதில் இருவரும் கணவன் மனைவியாக ஜோடி சேர்ந்து ரவுடி பேபி பாடலுக்கு நடனமாட அனைவரும் மகிழ்ந்தனர்.

அப்போது மேடையில் அவரின் இருமகள்களும் அம்மாவை கட்டிப்பிடித்து அழ ரோபோ சங்கர் உட்பட அனைவரும் உணர்ச்சிவசமடைந்தனர்.