43 வருடங்களுக்கு பின் மீண்டும் களமிறங்கிய சுஹாசினி!

நடிகை, இயக்குனர் சுஹாசினி, 43 வருடங்களுக்கு பின் மீண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடியுள்ளார்.

கடந்த 1976ஆம் ஆண்டு சுஹாசினி 13 வயதாக இருக்கும்போது முதல்முறையாக பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தினார். சரலாயா பரதநாட்டிய பள்ளியில் முறைப்படி பரதம் பயின்ற சுஹாசினி அதன்பின் தற்போதைய எல்டாம்ஸ் சாலை கமல் வீட்டில் 43 வருடங்களுக்கு முன் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சுமார் 100 பேர் முன்னிலையில் சுஹாசினியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தது.

அதன்பின் தற்போது மீண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் சுஹாசினி நடனம் ஆடியுள்ளார். அவருடைய இந்த நடனத்தை கணவர் மணிரத்னம், பத்மா சுப்பிரமணியம், லட்சுமி வைத்தியநாதன் உள்ளிட்டோர் கண்டு களித்தனர்.

இந்த பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு 43 வருடங்களுக்கு முன் அவருடன் பரதம் பயின்ற சீனியர் சண்முகசுந்தரம் அவர்கள் நடனப்பயிற்சி அளித்துள்ளார் என்பதும், சுஹாசினியின் முதல் அரங்கேற்றத்தின்போது அவருக்கு மேக்கப் போட்ட அதே மேக்கப் கலைஞர் சேதுமாதவன் என்பவர் தற்போதும் அவருக்கு மேக்கப் போட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.