நீ என்னை வாழவே விடமாட்டியா? தூக்கில் தொங்கிய நடிகையின் கடைசி கடிதம்..!

சினிமா பிரபலங்கள் தற்கொலை தொடர்கதையாகிவிட்டது. சீரியல் மற்றும் சினிமா துணை நடிகை யாஷிகா சென்னையில் வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளது அதிர்ச்சி அளித்துள்ளது.

அவர் சென்னை பெரவள்ளூர் ஜி.கே.எம் காலனியில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். அவர் தற்கொலை பற்றி விசாரித்தபோது அவரது டைரி மற்றும் செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி சோதனை செய்துவருகின்றனர். அதில் யாஷிகா தன் காதலர் பற்றி எழுதிய குறிப்புக்கள் கிடைத்துள்ளது.

`என்னை நீ ஏன் புரிந்துகொள்ள மாட்டிக்கிறாய், என்னை ஏன் டார்ச்சர் பண்ணுகிறாய், உன்னை நம்பிதானே நான் வந்தேன். நீ ஏன் என்னை வாழ விடவில்லை’ என டைரியில் குறிப்பிட்டுள்ளார்.

யாஷிகா சினிமாவில் சம்பாதித்த நிலையில் செல்போன் கடை ஊழியர் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. அவருடன் ஒன்றாக வீட்டில் வாழ்ந்துவந்துள்ளார் . அவர்கள் இடையே வந்த பிரச்சனை தான் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.