சௌந்தர்யாவின் திருமணத்திற்கு இவரே காரணம் – ரஜினிகாந்த் பேட்டி.!

சௌந்தர்யா ரஜினிகாந்த் இரண்டாவது திருமணம் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது. அதற்காக ரஜினி தற்போது பல பிரபலங்களை நேரடியாக சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

இன்று காலை நடிகர் பிரபு வீட்டில் ரஜினி சென்றபோது எடுத்த புகைப்படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது ரஜினி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசரை சந்தித்துபேசியுள்ளார்.

அதன்பின் ரஜினி அளித்துள்ள பேட்டியில் சௌந்தர்யா நிச்சயதார்த்தம் திருநாவுக்கரசர் மூலமாக தான் நடந்தது. அதனால் முதல் பத்ரிக்கையை அவரிடம் கொடுத்தேன் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.