பிரபல தனியார் சேனல் ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து, அதன் பின் சின்னத்திரையில் தோன்றி தற்போது வெள்ளித்திரையில் பல படங்களில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருப்ப்வர் பிரியா பவானிசங்கர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் பார்க்க மிகவும் ஹோம்லியாக இருந்ததால், வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் மேயாதமான், கடைக்குட்டி சிங்ம, தற்போது குருதி ஆட்டம் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மேயாத மான் பட வாய்ப்பு எப்படி வந்தது? ஹோம்லியாகவே நடிக்கிறீர்களே எப்போது கிளாமராக நடிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் ஸ்மார்ட்டாக பதில் அளித்துள்ளார்.
எனக்கு நடந்தது எல்லாமே எதிர்பாரதவிதமாகத் தான் நடந்தது. அப்படி தான் மேயாத மான் படமும் என்னிடம் வந்தது.
படத்தின் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் என்றதும், எனக்குப் பெரிய நம்பிக்கை வந்தது.
ஏனெனில், கார்த்திக் சுப்புராஜ் திறமையான நம்பிக்கை நல்ல படங்களைத் தரக்கூடியவர். அவரே ஒரு படத்தைத் தயாரிக்கும்போது, அதில் விஷயம் இல்லாமல் இருக்காது.
தவிர, இயக்குநர் ரத்னகுமார் குறும்பட இயக்குநராக இருந்து சினிமாவுக்கு வந்தவர். இப்படிப் பல பாஸிட்டிவ் பாயின்ட்ஸ் இருந்ததால், கதையைக் கேட்டதுமே சம்மதித்துவிட்டேன்.
என்னை ஏற்கனவே பலருக்கு தெரியும், என்பதால் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இனி நான் நடிக்கப் போகும் படங்களையும் என் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி நடிக்கப் போகிறேன்.
ரசிகர்கள் என்னுடைய ஹோம்லியை பார்த்து தான் ரசித்தனர், அதனால் நான் கிளாமராக நடிக்கமாட்டேன், கிளமாராக நடிக்கச் சொன்னால் என்னுடைய பதில் நோ என்று தெளிவாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி எனக்கு மாதவன் சாரை ரெம்ப பிடிக்கும், அவரிடம் ஒரு படமாவது பண்ணிவிட வேண்டும் என்ற ஆசை என கூறியுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.