நடிகர் சிவக்குமாரை சோகத்தில் ஆழ்த்திய பிரபலத்தின் மரணம்! வருத்ததுடன் இரங்கல்

சூர்யா, கார்த்தியின் அப்பாவான சிவக்குமார் சினிமாவில் ஒரு தனி வழியை கடைபிடித்து வந்தார். இதனால் அவரின் குடும்பத்தை பாராட்டாதவர்கள் இருக்க முடியாது.

நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது ஓவியம், இலக்கியம், இதிகாசம் படித்தல், மேடை சொற்பொழிவுகள் என தன் நேரத்தை மற்றவர்களுடன் பயனுள்ள வகையில் செலவழித்து வருகிறார்.

அண்மையில் அவரை மிகவும் கவலையில் ஆழ்த்தியது பிரபல மேடை பேச்சாளர் பேராசிரியை இளம்பிறை மணிமாறனின் கணவர் மணிமாறன் மரணம்.

நீண்ட நாளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த அவர் கடந்த ஜனவரி 24 பகல் 12 மணிக்கு காலமானார். இதனால் அவரின் உடல் நேற்று மாலை 6 மணியளவில் மதுரையில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இழப்பு இளம்பிறைக்கு மிகுந்த சோகத்தை உண்டாக்கியுள்ளார்.

இதனால் சிவக்குமார் பேராசிரியைக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆழ்ந்த வருத்தங்களையும் ஆறுதலையும் கூறிக்கொள்கிறேன் என இரங்கல் தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.