சொப்பனசுந்தரி யார் தெரியுமா? வெளியான முடிவுகள்

தமிழ் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமான வெற்றி பெற்றது. இதே பாணியில் கொஞ்சம் மாற்றி பிரபல தொலைக்காட்சி குழுமத்தின் புதிய சேனலில் சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அவ்வப்போது அதிக கவர்ச்சியான விஷயங்கள் இடம் பெற்றது என்ற செய்திகள் வெளியானது.

எதிர்பார்த்த அளவு பிரபலமாகாத இந்த நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. இதன் இறுதி போட்டியாளர்களாக 5 பேர் தேர்வு பெற்றனர்.

சொப்பன சுந்தரியின் டைட்டில் வின்னராக டிம்பிள் என்பவர் அறிவிக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை பவித்ரா பிடித்தார். பவி என்பவர் மூன்றாம் இடம் பிடித்தார்.

நடிகை நிக்கி கல்ராணி வெற்றியாளர்கள் பெயரை அறிவித்தார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.