நண்பர்கள் முன்னிலையில் சீரியல் நடிகைக்கு காதலரால் நேர்ந்த கொடுமை! அதிர்ச்சி சம்பவம்

சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் உள்ளவர்களின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் பெரிய அளவில் சர்ச்சை ஏற்படுத்திவிடும். அதுபோல தற்போது முன்னணி சீரியல் நடிகையை அவரது காதலர் நண்பர்கள் முன்னிலையில் அடித்து உதைத்தது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

Uttaran என்ற சீரியல் மூலம் பிரபலமான நடிகை டினா தத்தாவுக்கு தான் இப்படி ஒரு கொடுமை நடந்துள்ளது.

இது பற்றி அவர் தற்போது பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது..

“கடந்த 5 வருடங்களாக நான் திரைதுறையில் இல்லாத ஒருவரை காதலித்து வந்தேன். நண்பர்கள் மூலம் தான் நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டோம். நாளடைவில் அவர் என்னை மிகவும் மோசமாக நடத்த ஆரம்பித்தார். நான் செய்யும் வேலை பற்றி கேவலமாக பேசுவார். ஒருமுறை என்னை நண்பர்கள் முன்னிலையிலே அடித்து உதைத்தார்.”

“இனிமேலும் முடியாது என்கிற முடிவில் பிரேக்கப் செய்துவிட்டேன். கொடுமைகள் பற்றி வெளியில் சொல்ல வேண்டாம் என தான் நினைத்தேன். ஆனால் இது பேசவேண்டிய நேரம்,” என அவர் கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.