நடிகரை அடுத்து ஆரவ் எடுத்த அடுத்த அவதாரம்

பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ், தற்போது ‘ராஜபீமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து கொண்டிருக்கின்றார்.

இந்த படத்தில் ஓவியா ஒரு முக்கிய தோற்றத்தில் நடிப்பதோடு ஆரவ்வுடன் ஒரு குத்து பாடலுக்கும் நடனமாடியுள்ளார்.

இந்த நிலையில் ‘ராஜபீமா’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஆரவ் தனது சொந்தக்குரலில் ஒரு பாடலை பாடி, பாடகர் என்ற புதிய அவதாரத்தையும் எடுத்துள்ளார்.

சைமன் இசையமைப்பில் உருவான இந்த பாடல் உள்பட இந்த படத்தின் அனைத்து பாடல்களும் விரைவில் வெளியாகவுள்ளது.

நரேஷ் சம்பத் இயக்கத்தில் எஸ்.மோகன் தயாரிக்கும் இந்த படம் ஒரு மிருக முரண்பாடுகளை பற்றி உருவாக்கப்பட்ட கதையம்சம் கொண்ட படம் என்றும், நகர்ப்புற பின்னணியில் படமாக்கப்படும் மனிதன் – விலங்கு சார்ந்த படம் என்றும் கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.