தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். முதல் படத்திலேயே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதையடுத்து பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது நடிகர் மகத்துடன் காதல் கிசுகிசுவில் சிக்கி மீண்டும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தற்போது யாஷிகா ஆனந்த் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார். யாஷிகாவின் கவர்ச்சியை பார்த்த ரசிகர்கள் அவரை மோசமாகவும் ஆபாசமாகவும் விமர்சித்துள்ளனர்.அந்தப் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.