மகளின் நினைவாக பாடகி சித்ரா செய்த நெகிழ்ச்சி செயல் – வியப்பில் ரசிகர்கள்..!!


தமிழ், தெலுங்கு,மலையாளம் ஹிந்தி மொழிகளில் 25, 000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் சித்ரா. இவரது கணவர் விஜயசங்கர். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட இவர்களின் ஒரே மகள் நந்தனா, கடந்த 2011ல் துபாயில் நீச்சல்குளத்தில் மூழ்கி உயிரிழந்தார்.

அந்த மகளின் நினைவாக, பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார் சித்ரா. இவர் தற்போது கேரளாவின் பருமுலாவில் உள்ள புனித கிரிகோரியஸ் சர்வதேச கேன்சர் மையத்தில், கீமோ தெரபி சிகிச்சை பிரிவை இலவசமாகக் கட்டிக்கொடுத்துள்ளார்.

இதன் துவக்க விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட சித்ரா, மகள் பற்றிப் பேசத்துவங்கியதும் பேசமுடியாமல் விம்மினார். தொடர்ந்து பைத்தலம் ஏசுவே என்ற கிறிஸ்தவ பாடலைவிட்டு பேச்சை முடித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!