வாரிசு நடிகருடான காதல் முறிந்தது.. நடிகை கத்ரீனா கைஃப் பற்றிய அதிர்ச்சி தகவல்..!!


பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர் நடிகை தீபிகா படுகோனேவை பிரிந்த பிறகு நடிகை கத்ரீனா கைஃபை காதலித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் லிவ் இன் முறைப்படி வசித்து வந்தனர்.

இந்நிலையில் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர்.

ரன்பிர் கபூருடனான் காதல் முறிவை தனக்கு கிடைத்த ஆசிர்வாதமாக பார்ப்பதாக கத்ரீனா தெரிவித்துள்ளார். அவரை பிரிந்த பிறகு என்னை நானே புரிந்து கொண்டேன். இத்தனை நாட்களாக நான் என்னையே புரிந்து கொள்ளாமல் வாழ்ந்தது தெரிய வந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்த காதல் முறிவுக்கு பிறகு என் வாழ்வில் தெளிவு ஏற்பட்டுள்ளது. நான் யோசிக்கும் விதம் என்று அனைத்துமே மாறிவிட்டது. இத்தனை நாட்களாக என்னை புரிந்து கொள்ளாமல் வாழ்ந்து வந்திருக்கிறேன். தற்போது என் வாழ்வில் நான் மட்டும் தான். அதனால் என் கவனம் எல்லாம் என் மீது மட்டும் தான் என்கிறார் கத்ரீனா.


நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. என்னிடம் பாசம் காட்டினால் நானும் பாசமாக இருப்பேன். இல்லை என்றால் கண்டுகொள்ள மாட்டேன். என் கெரியர் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. ஜீரோ படத்தில் நடித்துள்ளேன். திடீர் என்று ஒரு நாள் சல்மான் கானின் பாரத் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. நடிப்பில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று கத்ரீனா கூறியுள்ளார்.

ரன்பிர் கபூர் தற்போது நடிகை ஆலியா பட்டை காதலித்து வருகிறார். ஆலியாவை ரன்பிர் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலியாவும், கத்ரீனாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!