மெர்சல் படத்தை தாக்கிய கமல்..!! அதிர்ச்சியடைந்த தளபதி ரசிகர்கள்…!!!


மெர்சல் படம் வெளிவந்து பல பிரச்சனைகளை சந்தித்து நல்ல வசூலையும் பெற்றுவிட்டது. இப்படத்தை கமல்ஹாசன் ஸ்பெஷல் ஷோ ஒன்றை பார்த்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் கமல் வாரந்தோறும் பிரபல வார இதழில் கேள்வியும் அவரே, பதிலும் அவரே என்று ஒரு கட்டுரை எழுதி வருகின்றார்.

அதில் இந்த வாரம் ‘மெர்சல் படத்தில் சிங்கப்பூர் பற்றி எல்லாம் வசனங்கள் இருக்கின்றது, அங்கெல்லாம் 40% பேர் மிகச்சரியாக வரி கட்டுகின்றனர்.

அதிலும் நம்மை விட பல மடங்கு அதிக வரி, அதனால் அவ்வளவு வசதிகளை எதிர்ப்பார்க்க முடியும், ஆனால், இங்கு சுண்டக்காய் பணத்தை கொடுத்துவிட்டு பூசணிக்காய் எதிர்ப்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்’ என்று கமல் கூறியுள்ளார்.

கமல் திடீரென்று இப்படி மெர்சல் வசனத்திற்கு எதிராக பேசுவது ஆச்சரியத்தை வரவைத்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#