2.0 படத்தில் நடிகர் அக்ஷய்குமாருக்கு டப்பிங் பேசியவர் யார் தெரியுமா..?


பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘2.0’ நேற்று (2018 நவம்பர் 29) உலகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியானது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள 2.0 முப்பரிமாண (3டி) தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் அக்ஷய் குமாருக்கு தமிழ் பேச தெரியாது என்பதால் டப்பிங் பேச ஒரு பிரபல தமிழ் நடிகரை இயக்குநர் தேர்ந்தெடுத்து பயன்படுத்தியுள்ளார். இவர் வேறு யாருமல்ல, பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துவரும் ஜெயபிரகாஷ் தான். இவர்தான் அக்ஷய் குமாருக்கு டப்பிங் பேசியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.