பிரபல நடிகரின் அதிரடி செயல்..!!! கதறும் கீர்த்தி சுரேஷ்…!!!


த்ரிஷாவிடம் பேசி அவரின் மனதை மாற்றிவிட்டார் விக்ரம் என்று கூறப்படுகிறது.

ஹரி இயக்கத்தில் விக்ரம், த்ரிஷா நடித்த சூப்பர் ஹிட் படமான சாமியின் 2ம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஹீரோயின்கள் என்று அறிவிக்கப்பட்டது.

விக்ரம், த்ரிஷா கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு பிடித்துப் போக, பீமா படத்திலும் அது தொடர்ந்தது. பீமா ஃபிளாப்பானாலும் விக்ரம், த்ரிஷா தொடர்ந்து நண்பர்களாக இருந்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன் 3 ரோஸஸ் விளம்பரத்தில் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்.


இந்நிலையில், சிங்கம் படத்தை 3 பாகங்களாக எடுத்து முடித்த தெம்பில், சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க ஹரி திட்டமிட்டார். அதில், த்ரிஷா மீண்டும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். நடிகை கீர்த்தி சுரேஷும் இரண்டாவது ஹீரோயினாக படத்தில் சேர்ந்தார்.

ஆனால்,இந்நிலையில் படத்தை விட்டு விலகுவதாக த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்திருந்தார். த்ரிஷா இல்லாமல் சாமி படம் நன்றாகவே இருக்காது என்று ரசிகர்கள் தெரிவித்தனர்.

மகளின் திருமண வேலைகளில் பிசியாக இருந்த விக்ரம் தற்போது த்ரிஷாவை சந்தித்து பேசி சாமி 2 படத்தில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டாராம்.


விக்ரம் வந்து சந்தித்து பேசிய பிறகு த்ரிஷா தனது மனதை மாற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.

திரிஷா இல்லையென்றால் சாமி படத்தின் கன்ட்டினியூவிட்டி மிஸ் ஆகும். இரண்டாம் பாகம் கம்ப்ளீட் படமாக உருவாக வேண்டுமென்றால் திரிஷா இல்லாமல் சற்று கடினமான விஷயமாக இருக்கும்.

எனவே, விக்ரம் எடுத்துள்ள இந்த முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது என்றே கூறவேண்டும். முன்னதாக, இயக்குனர் ஹரி, தான் இயக்கிய சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் கதாநாயகியை மாற்றாமல் ஒரே பாதையில் கொண்டுசென்று வெற்றியும் கண்டவர் என்பது குறிப்பிடதக்கது.


சியான் விக்ரம்-ன் அதிரடியால், தனக்கு முக்கியத்துவம் குறைந்துவிடும் என்று குமுருகிராராம் கீ நடிகை. மேலும், திரிஷா படத்தை விட்டு வெளியேற முக்கிய காரணமே கீ நடிகையின் அலம்பல் தான் என்று கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடதக்கது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#