அஜித்தால் இந்தியாவிற்க்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை..!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!


விஸ்வாசம் படத்தின் சூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் முடிவடைந்தது. இதையடுத்து சென்னை திரும்பிய அஜித், தான் ஆலோகராக இருக்கும் தக் ஷா குழுவை நேற்று சந்தித்தார். அப்போது இந்தியாவில் முதல் முறையாக ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை தயாரித்து சோதனை ஓட்டமாக பறக்க விட்டார் அஜித்.

நடிகர் அஜித்தை தொழில் நுட்ப ஆலோகராக கொண்ட அண்ணாபல்கலைக்கழக மாணவர் குழு ( தக் ஷா) ஏற்கனெவே ஏர் ஆம்புலன்ஸ் ஒன்றை வடிவமைத்து சாதனை படைத்துள்ளது. இந்த ஏர் ஆம்புலன்ஸ் சென்னையில் இருந்து வேலூர் வரை சென்று வரும் வல்லமை படைத்தது.

ட்ரோன் என்னும் வானில் பறக்கும் ஏர் டாக்சியை கடந்த வருடம் துபாய், அறிமுகப்படுத்தி இருந்தது. அப்போது , இந்த வசதியெல்லாம் நம் நாட்டிற்கு வர இன்னும்15 ஆண்டுகளாவது ஆகும் என்று நாம் எண்ணினோம். ஆனா, தற்போது ஒரே ஆண்டில் அந்த சாதனையை, அஜித்தை தலைமையாக கொண்டு செயல்படும் தக் ஷ் குழுவால் முறியடிக்கப்பட உள்ளது.


ஏர் டாக்சியின் சிறப்பு அம்சங்கள் :

80 கிலோ எடை கொண்ட மனிதர்களை தூக்கிச்செல்லும் திறனுடையது.
20 கிலோ மீட்டர் சுற்றளவில் எளிதாக பறந்து செல்ல கூடியது.
இந்தியாவிலே முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஏர் ஆம்புலன்சின், பாகங்களை ஒருங்கிணைத்து வானில் பறக்க வைத்து பரிசோதித்தார். அந்த குட்டி விமானம் வெற்றிகரமாக வானில் இயங்கியது.

இது தொடர்பாக பேராசிரியர் செந்தில் கூறுகையில், வடிவமைப்பில் இன்னும் முழுமையடையாத இந்த ஏர் டாக்சியை தமிழக அரசின் நிதி உதவியுடன் இருக்கை மற்றும் மேற்கூறையுடன் சிறிய ரக கார் போல வடிமைத்து வானில் பறக்கும் டாக்சியாகவும், ஆபத்து காலங்களில் உயிருக்கு போராடும் நபர்களை ஏற்றி மருத்துவமனைகளுக்கு விரைவாக கொண்டு செல்லும் ஏர் ஆம்புலன்சாகவும் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர தக் ஷா மாணவர் குழு திட்டமிட்டுள்ளது, இதற்காக தமிழக அரசிடம் இருந்து நிதி உதவியை எதிர்பார்ப்பதாகவும் பேராசிரியர் செந்தில் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!