பாகுபலியின் வளர்ப்பு தந்தையால் கர்ப்பமான பெண்…!!! அதிர்ச்சியடைந்த திரையுலகம்..!!


பாகுபலி படத்தில் நடித்த நடிகர், 7 ஆண்டுகளாக ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, 2 முறை கர்ப்பமாக்கி உள்ளதாக வெளிவந்த செய்தி திரை உலகினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது

7 ஆண்டுகளாக ஏமாற்றி கர்ப்பமாக்கிய பாகுபலி பட நடிகர் வெங்கட பிரசாத்தை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்

யார் அந்த வெங்கட பிரசாத்..?

எஸ்.எஸ். ராஜமவுலி டைரக்க்ஷனில் பாகுபலி படத்தில் பிரபாஸின் வளர்ப்புத் தந்தையாக நடித்தவர் தான் வெங்கட பிரசாத்.


அவர் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத்ஸ் ஐமேக்ஸ் மல்டிபிளக்ஸில் மேனேஜராகவும் உள்ளார்.அந்த மல்டிபிளக்ஸில் வேலை செய்யும் பெண் ஒருவர் பிரசாத் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரசாத் 7 ஆண்டுகளாக எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் என்னுடன் நெருங்கிப் பழகியதில் 2 முறை கர்ப்பம் ஆனேன் என புகாரில் கூறியுள்ளார்..

ஆனால் அவர் வலுக்கட்டாயமாக கருவை கலைக்க வைத்துவிட்டார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டேன்.

திருமணப் பேச்சை எடுத்தால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார் என அந்த பெண் கூறியுள்ளார்

மேலும், வெங்கட பிரசாத் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.


அந்த பெண்ணை பற்றி,

திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் அந்த பெண். அவருக்கு விவாகரத்து கிடைக்கும் முன்பே பிரசாத் அவருக்கு மறுமணம் ஆசை காட்டி ஏமாற்றியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது..

வெங்கட பிரசாத் பல பெண்களுடன் நெருங்கிப் பழகி ஏமாற்றியது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#