பிரபாசின் ரசிகையால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!!! எதனால் தெரியுமா..?


சினிமாவில் நடிகர்கள் மக்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே நிறைய படங்கள் நடிக்கின்றனர். பல கஷ்டங்களை தாண்டி நடிகர்கள் நடித்தாலும் ஒரு சில படங்கள் தான் மாபெரும் வெற்றியை சந்திக்கிறது.

அப்படி தெலுங்கில் தயாராகி தமிழ், ஹிந்தி என டப் செய்யப்பட்டு மக்களின் வரவேற்பை பெற்ற படம் பாகுபலி. இப்படத்தால் நடிகர் பிரபாஸுக்கு ஏகப்பட்ட ரசிகைகள். அவர் கூட ஒரு பேட்டியில் பாகுபலி படத்திற்கு பிறகு தனக்கு 6000க்கும் அதிகமாக வரன்கள் வந்ததாக கூறினார்.

இந்த நிலையில் இவரின் தீவிர ரசிகை ஒருவர் பிரபாஸின் முகத்தை தன்னுடைய முதுகில் பச்சை குத்தியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#