அனுஷ்காவின் சபதத்தால் ஷாக்கான ரசிகர்கள்..!! அப்படி என்ன சொன்னார் தெரியுமா..?


நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இருந்தாலும் இவர் கடந்த சில மாதங்களாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. வந்த வாய்ப்பையும் அவர் வேண்டாமென்று ஒதுக்கிவிட்டார். அதற்கு காரணம் அவர் உடல் எடைதான்.

நடிகை அனுஷ்காவுக்கு சமீபத்தில் உடல் எடை அதிகமாகி விட்டது. ‘பாகுபலி 2’ படத்தில் கூட அவரது உடல் எடை கூடியிருந்தது. இருந்தாலும் அதை அவர்கள் கிராபிக்ஸ் மூலம் அவரை ஒல்லியாக காட்டியுள்ளார்கள். அதற்காக பல கோடி ரூபாய் செலவானதாம். அனுஷ்கா கடைசியாக நடித்த படம் ‘பாகமதி’.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா, தற்போது உடல் எடை குறைப்பதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறார். அது முடிந்து எடை குறைத்தபிறகு தான் மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என உறுதியோடு இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘பழைய மாதிரியான தோற்றத்துக்கு வந்த பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். என்னைத் தேடி பட வாய்ப்புகள் அதிகமாக வருகின்றன.உடல் எடையை குறைத்த பின்புதான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதால் எந்த வாய்ப்பையும் ஒப்புக்கொள்ளவில்லை” என்றார் நடிகை அனுஷ்கா.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!