மீடு விவகாரம்.. சின்மயிற்கு ஐடியா கொடுக்கும் ராதாரவி..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!


சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்தார் என பரபரப்பான குற்றச்சாட்டை பாடகி சின்மயி கூறினார். இதனையடுத்து பாடகி சின்மயிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் பேசிவந்தனர்.

சினிமாவுக்கு நடிக்க வரும்போது, நடிக்க தெரியுமா, நடனம் ஆடத்தெரியுமா என்றுதான் கேட்போம். ஒரு வேளை நாங்கள் கேட்காமல் விட்டது கன்னித்தன்மை பற்றிதான். ஆனால், இப்போது அதனையும் கேட்பதில் எங்களுக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை என ராதாரவி கூறியுள்ளார்.

தயவுசெய்து சினிமாவில், இந்த மீடூ மூலம் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்காதீர்கள். வைரமுத்து மீது பாலியல் குற்றம்சாட்டியுள்ள சின்மயி, ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், சுவிட்சர்லாந்து சென்றபோது பயன்படுத்திய பாஸ்போர்ட் காணவில்லை, அதனை தேடிக்கொண்டிருக்கிறேன் என முட்டாள்தனமாக இருக்கிறது.

தற்போது பாஸ்போர்ட் வேண்டுமென்றால், நம்பரை தட்டினால் போதும் நமது அனைத்து விவரங்களும் வந்துவிடும்.

நான் உனக்கு ஐடியா தருகிறேன், நீ பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்று நம்பரை கொடு, அனைத்து விவரங்களும் கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!