கேதர்நாத் பட இயக்குனர் மீது நடிகை அம்ரிதா சிங் கோபமாக உள்ளாராம்.
பாலிவுட் நடிகை அம்ரிதா சிங்கின் மகள் சாரா அலி கான். அபிஷேக் கபூரின் கேதர்நாத் படம் மூலம் நடிகையாகியுள்ளார். அந்த படத்தில் அவர் சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜோடியாக நடிக்கிறார்.
முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் சாராவுக்கு புதுப்பட வாய்ப்பு வந்தது.
சாரா
அனுஷ்கா
நடிகை அனுஷ்கா சர்மா தயாரிக்கும் புதுப்படத்தில் ஹீரோயினாக நடிக்குமாறு சாரா அலி கானிடம் கேட்டுள்ளார். இது குறித்து அறிந்த அபிஷேக் கபூர் சாராவுக்கு ஒரு கன்டிஷன் போட்டாராம்.
கூடாது
முதல் படம்
முதல் படத்தில் நடித்து முடிக்கும் வரை அடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகக் கூடாது என்று அபிஷேக் சாராவிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்ட அம்ரிதாவுக்கு கோபம் வந்துவிட்டது.
அம்ரிதா
கோபம்
என் மகளுக்கு வரும் வாய்ப்பை ஏற்க வேண்டாம் என்று நீங்கள் எப்படி சொல்லலாம் என அம்ரிதா சிங் அபிஷேக்குடன் சண்டைக்கு பாய்ந்துள்ளார். ஆனாலும் அபிஷேக் தனது நிலையை மாற்றிக் கொள்ளவில்லையாம்.
சரி
படம்
அம்ரிதா என்ன சொன்னாலும் அபிஷேக் கேட்கவில்லையாம். இதையடுத்து ஒரு வழியாக அமைதியாகியுள்ளார் அம்ரிதா சிங். மகளின் சினிமா வாழ்க்கை நல்லபடியாக அமைய வேண்டும் என்று விரும்புகிறார் அம்ரிதா.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#