நான் பப்ளிசிட்டிக்காக கூறவில்லை.. போட்டுத்தாக்கிய பாடகி சின்மயி..!!


கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி சமீபத்தில் பாலியல் புகார் கூறியிருந்தார். இதற்கு வைரமுத்து மறுப்பு தெரிவித்த நிலையில், சின்மயி மீண்டும் வைரமுத்து மீது குற்றம்சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் சுவிட்சர்லாந்தில் நடந்த ‘‘வீழமாட்டேன்?’’ என்ற நிகழ்ச்சிக்கு வைரமுத்து தான் அழைப்பு விடுத்தார். அவர் மீது வைத்திருந்த மரியாதை காரணமாக ஒப்புக்கொண்டு சென்றேன். நிகழ்ச்சி முடிந்ததும் எங்களை மட்டும் விடுதியில் தங்க வைத்தனர். அப்போது தான் இந்த சம்பவம் நடந்ததாக என் தாயார் கூறினார்.

அதன்பின்னர் வைரமுத்துவிடம் கையெழுத்து வாங்க சென்றபோது என் மீது அத்துமீறல் நடந்தது. அவர் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டது உண்மை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த சின்மயி, ‘அந்த சமயத்தில் ஏன் சொல்லவில்லை என்று கேட்கிறார்கள்.


அப்போது எனக்கு துணிச்சல் இல்லை, இப்போது பயம் இல்லை. பப்ளிசிட்டிக்காக வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு கூறுவதாக கூறுகிறார்கள். நான் பாடிய 96 படத்தின் பாடல்கள் இப்போதுதான் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியுள்ளது. டப்பிங் கொடுக்கிறேன். நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன். நான் பப்ளிசிட்டிக்காக கூறவில்லை.

பாலியல் புகார்களை சொல்லும் சூழல் சமூகத்தில் தற்போதுதான் உருவாகியுள்ளது. புகார் அளித்ததால் எனக்கு வாய்ப்புகள் குறைந்தாலும் அதைப்பற்றி கவலையில்லை. ஒருவர் முன்வந்து சொன்னால்தான் உண்மைகள் வெளியே வரும். என்னைப் போல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைரமுத்து மீது புகார் அளிப்பீர்களா? என்ற கேள்விக்கு, என்னுடைய வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து வருகிறேன். விரைவில் வழக்கு தொடர்வேன்’ என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!