திருமணத்திற்கு முன்பே அவருடன் டேட்டிங் செல்ல விரும்பினேன்..!! கரீனா கபூர் அதிரடி


பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை கரீனா கபூர். இவர், பாலிவுட்டில் பிரபலமான நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கரீனா கபூர், சயீல் அலிகானை காதலிப்பதற்கு முன்னதாக, வேறொருவரை காதலித்ததாகவும், அவருடன் டேட்டிங் செய்ய விருப்பம் இருந்ததாகவும், கரீனா குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறியுள்ளார்.

ஆம், அது வேறு யாருமில்லை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தானாம்.

இது குறித்து அவர் கூறுகையில், சயீப் அலிகானை காதலிப்பதற்கு முன்பு, ராகுல் காந்தியை கரீனா கபூர் விரும்பியுள்ளார் என்று சோனியா காந்தி மற்றும் கரீனா குடும்பத்திற்கு நெருக்கமான பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.


இரு குடும்பங்களைப் பற்றி அவர் எழுதியுள்ள புத்தகம் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு, இரு குடும்பங்களுடனும் இணக்கமாக நெருங்கி பழகி வந்துள்ளார். அப்போது, ராகுல் காந்தி மீது தனது ஆசையை வெளிப்படுத்திய கரீனா, அவருடன் இணைந்து பல இடங்களுக்கு செல்ல ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

அதே போன்று, ராகுலும், கரீனாவின் படங்களை பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். முதல் நாளிலேயே கரீனா நடித்த படங்களை அவர் பார்த்துவிடுவார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த கரீனா, அவர் கூறியது அனைத்தும் இரு குடும்பங்களும் நெருக்கமாக பழகிய கால கட்டங்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!