அட.. நம்ம அஜித் இவ்வளவு நல்லவரா..? அப்படி என்ன செய்தார் தெரியுமா..?


அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர். இவர் நடிப்பில் பிரமாண்டமாக விஸ்வாசம் படம் வரவுள்ளது.

இந்நிலையில் பிரபல நடிகை தமிழ்செல்வி அஜித் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார், இதில் அவர் பேசுகையில் ‘அவரை பற்றி பேச, இந்த ஒரு நாள் போதாது.

ஏனெனில் என் கணவர் ட்ராபிக் போலிஸாக தான் இருக்கின்றார், ஒரு நாள் இரவு 12 மணி தாண்டியும் ஒரு வண்டி சிக்னலில் நின்றுள்ளது.

அட, நம்மூர்ல இவ்வளவு நல்லவரா என்று என் கணவர் சென்று பார்க்க, அது வேறு யாருமில்லையாம், அஜித் சார் தான்’ என தமிழ்செல்வி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!