‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகனவர் நடிகை ஷ்ரேயா.
அதன் பின்னர் வெளியான, ‘மழை’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
“மழை” திரைப்படம் நடிகை ஷ்ரேயாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
அதன் பின்னர், ரஜினி, விஜய், விக்ரம்,தனுஷ் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.
12 வருடங்களுக்கு முன்பு தமிழில் அறிமுகமாகி, தொடர்ந்து நடித்து வரும் நடிகை ஷ்ரேயாவுக்கு, தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டது.
அவரின் வயதை காரணம் காட்டி வாய்ப்புகள் கை நழுவி போவதாக கூறப்படுகின்றது.
ஆனாலும், ஷ்ரேயா உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
சமீபத்தில் கூட, தான் கவர்ச்சி உடையில் தண்ணீரில் நிற்கும் போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் நடிகை ஷ்ரேயா.
அந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
பட வாய்ப்புக்காகத்தான் அவர் அப்படி செய்தார் என்று அனைவரும் கூறிய நிலையில், தற்போது அது உண்மையாகி உள்ளது.
நடிகை ஷ்ரேயாவுக்கு தற்போது, ஏராளமான பட வாய்ப்புகள் வருகின்றதாம்.
ஆனால், ஷ்ரேயா கேட்கும் சம்பளத்தை கேட்டு தயாரிப்பாளர்கள் வாய் பிளக்கிறார்களாம்.
ஒரு படம் நடிக்க, 1 கோடி ரூபாய் சம்பளம் அவர் கேட்கிறாராம்.
வயதான நடிகைக்கு இவ்வுளவு சம்பளமா..? என்று தயாரிப்பாளர்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!