கேரள வெள்ளத்தில் சிக்கிய நடிகை சீதாலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!!


எங்க வீட்டு மாப்பிள்ளை தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமான சீதாலட்சுமியின் வீட்டை மழை வெள்ளம் சூழ்ந்ததால் உணவு உள்ளிட்ட எந்த உதவியுமின்றி தவித்ததாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த நூறாண்டில் இல்லாத அளவுக்கு மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்பால் சுமார் 370-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடு, உடமைகளை இழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கி கொண்ட நடிகை சீதாலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் மீட்பு படையினர் உதவியுடன் மீட்கப்பட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!