பெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் மிக உயரத்துக்கு சென்றுவிட்டாராம் ஓவியமானவர். இதனால், தினமும் பார்ட்டிகளுக்கு சென்று வருகிறாராம். நடிகையை முன்பு கண்டுக்கொள்ளாதவர்களும் தற்போது போனில் அழைத்து பார்ட்டியில் கலந்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்களாம்.
நடிகையும் பழசையெல்லாம் மறந்துவிட்டு அவர்களுடன் பார்ட்டி கொண்டாடி தீர்க்கிறார். இந்த புகழ் நிரந்தரம் இல்லை… நல்ல படங்களில் நடித்தால்தான் கேரியரை உயர்த்த முடியும். இதை நடிகை உணர்வாரா? என்று நலன் விரும்பிகள் பலரும் கேட்கிறார்களாம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!