‘கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்துங்கள்’…!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!


சிம்பு தமிழ் சினிமாவில் கமலுக்கு பிறகு பல திறமைகளை தன்னுள் வைத்திருக்கும் கலைஞன். சிம்பு மட்டும் தன் திறமையை சரியாக பயன்படுத்தினார் ரன்பீர் கபூர் போல் வரலாம்.

இப்படி கூறியது வேறு யாரும் இல்லை சிம்புவை வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கௌதம் மேனன் தான்.

அந்த அளவிற்கு திறமையை வைத்துள்ளது சிம்பு, சினிமாவில் அதிகம் தெரிந்துவிட்டது என்பதால் சினிமா மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டதா என்று தெரியவில்லை.


அவரின் திரை வளர்ச்சி கடந்த 7, 8 வருடமாகவே மிகவும் மோசமான நிலையிலேயே தான் உள்ளது, வாலு படம் வெளிவரவே 4 வருடம், அது வெளிவந்தும் அவருக்கு பெரிய திருப்பம் ஏதும் கிடைக்கவில்லை.

ஆனால், அவருடைய ரசிகர்களை திருப்திப்படுத்தியது, அதை தொடர்ந்து சிம்பு ரசிகர்கள் எல்லோரும் கொண்டாடும்படி ஒரு படம் அமைந்தது என்றால் அச்சம் என்பது மடமையடா தான்.

இப்படம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகின்றது, அதை ரசிகர்கள் டுவிட்டரில் கொண்டாடி வருகின்றனர், மேலும், தன் நாயகனை இப்படித்தான் பார்க்க வேண்டும் என்று நினைத்த ரசிகனுக்கு அச்சம் என்பது மடமையடா ஒரு விருந்தாக அமைந்தது.


இதையெல்லாம் விட அந்த சமயத்தில் தான் ரூ 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்க, அதையும் தாண்டி இப்படம் வெற்றியடைந்தது, இதன் பிறகு மீண்டு வருவார் என்று நினைத்தால் AAA-வில் மீண்டும் சொதப்பினார்.

இதனால், ரசிகர்கள் மிகவும் கவலையில் இருக்க, அவர்களுக்கு ஆறுதலாக தற்போது சிம்பு மணிரத்னம் படத்தில் கமிட் ஆகியிருப்பதாக ஒரு செய்தி வந்தது, இப்படத்தின் மூலம் சிம்பு ரசிகர்கள் விரும்பும் சிம்புவாக மீண்டு(ம்) வரவேண்டும், இது தான் ஒவ்வொரு ரசிகனின் ஏக்கமும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!