படப்பிடிப்பின் போது நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்ட நடிகர்..!! எதற்காக தெரியுமா..?


விசுவாசம் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகின்றது. இந்நிலையில் அஜித் இப்படத்தில் இரண்டு கெட்டப்பில் நடித்து வருகின்றார்.

தம்பி ராமையா அஜித்தின் தாய் மாமனாக நடிக்க, விவேக் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் போது நடிகர் விவேக் நயன்தாராவை கேரவனிலேயே சந்தித்து மன்னிப்பு கேட்டதாக முன்னணி பத்திரிகையாளர் கூறியுள்ளார்.


அது சரி, விவேக் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது, அது வேறு ஒன்றுமில்லை ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா காதல் குறித்து விவேக் கிண்டலாக பேசுவார்.

அதை தொடர்ந்து அதற்கு பலரிடமிருந்து எதிர்ப்பு வந்தது. இதனால், தான் விவேக் நயன்தாராவிடம் மன்னிப்பு கேட்க, அவரும் ‘அட ஏன் சார், இதெல்லாம் எனக்கு தெரியவே தெரியாது, எதற்கு மன்னிப்பு எல்லாம்’ என்று பெருந்தன்மையாக பேசியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!