அறியாமல் தப்பு பண்ணிட்டேன்.. நினைக்கவே கஷ்டமா இருக்கு..!! கவர்ச்சி நடிகை உருக்கம்..!!


வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்போது பாலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார். அவரின் வாழ்க்கை வரலாறு கரன்ஜித் கவுர்: தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெப்சீரீஸாக எடுக்கப்பட்டுள்ளது.

10 எபிசோடுகள் கொண்ட அந்த சீரீஸில் நடித்தது குறித்து பேட்டி அளித்துள்ளார் சன்னி லியோன். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

என் அம்மா 2008ம் ஆண்டு இறந்தார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அப்பா கடந்த 2010ம் ஆண்டு உயிர் இழந்தார். வெப் சீரீஸில் என் பெற்றோராக நடித்தவர்கள் உண்மையான பெற்றோர் இல்லை என்று எனக்கு தெரியும். இருப்பினும் அவர்கள் இறந்து போவது போன்ற காட்சியை பார்க்க ரொம்ப கஷ்டமாக இருந்தது.


சவப்பெட்டியில் ரீல் அம்மா, ரீல் அப்பா புற்றுநோயால் அவதிப்படுவது போன்று நடித்ததையே பார்க்க முடியவில்லை. இந்த காட்சி எல்லாம் வரும் என்று எனக்கு தெரியும். ஆனால் என்னால் தாங்கிக் கொள்ள முடியும் என்று நினைத்தேன், முடியவில்லை. என்னை நல்லவள் போன்று காட்ட இந்த சீரீஸை எடுக்கவில்லை. உண்மையை உலகிற்கு சொல்லியுள்ளோம்.

பணத்தின் மதிப்பை என் பெற்றோர் எனக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளனர். அதனால் நான் முதலில் தொழில் அதிபர் அதன் பிறகே நடிகை. தற்போது மூன்று குழந்தைகளுக்கு நான் தாய். அதனால் பணம் நிச்சயம் எனக்கு பிடித்த ஒன்று. நான் என் வாழ்வில் பல தவறுகளை செய்துள்ளேன். அது தற்போது தான் புரிகிறது.

என் வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகள் எனக்கு தெரியும். ஆனால் நான் எடுத்த முடிவுகள் என் குடும்பம் மற்றும் எனக்கு நெருக்கமானவர்களை எப்படி பாதித்தது என்பது தெரியவில்லை. அது தற்போது புரியும்போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நம்ம பிலிம்ஸை சேர்ந்த ஷரீன் மற்றும் என் கணவர் டேனியல் வெபர் தான் என்னை பற்றிய வெப் சீரீஸ் எடுக்கும் ஐடியாவை கொடுத்தனர் என்கிறார் சன்னி லியோன்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!