நடிக்க வருவதற்கு முன் SJ.சூர்யா என்ன வேலை பார்த்தார் தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


இயக்குனராக பல ஹிட் படங்களை கொடுத்த பிறகு நடிகரானவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் சமீபத்தில் வில்லனாகவும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். ஸ்பைடர் மற்றும் மெர்சல் படங்களில் அவரின் நடிப்பு ரசிகர்களை அதிகம் ஈர்த்தது.

அவர் ஆரம்பத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தான் வாய்ப்பு தேடியுள்ளார். லயோலா கல்லூரியில் படித்து முடித்தபிறகு சினிமாவில் வாய்ப்பு கேட்டு அலைந்துள்ளார்.

அது கிடைக்காததால் ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து, அப்படியே சினிமா வாய்ப்பை தேடியுள்ளார். அதன் பிறகு துணை இயக்குனராகி, சில வருடங்கள் கழித்து சொந்தமாக படம் இயக்கும் அளவுக்கு வளர்த்து, பின் நடிகராகி, இப்போது ஒட்டுமொத்த தென்னிந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார்.

இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு காரணமான கடின உழைப்புக்கு சொந்தக்காரரான எஸ்.ஜே.சூர்யாவுக்கு இன்று பிறந்தநாள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!