நான் உள்ளே இருந்தால் இவரைத்தான் சிறையில் போடுவேன்..!! அனந்த் வைத்யநாதன் கூறிய அதிர்ச்சி தகவல்..!!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுள் ஒருவர் அனந்த் வைத்யநாதன். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஆரம்பம் முதல் இப்போது வரை குரல் பயிற்சியாளராக இருக்கிறார்.

இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்தளவிற்கு பல சீசன்களில் கலந்துகொண்ட இவருக்கும் ரசிகர்கள் இருக்கிறார். இரண்டாம் வாரமே வீட்டை விட்டு போக வேண்டும் என்னால் முடியவில்லை என கூறியவரை மேலும் ஒருவாரம் உள்ளே மக்கள் அவரை உட்காரவைத்து விட்டார்கள்.

இந்நிலையில் அவர் மூன்றாம் வாரம் வெளியேறினார். தற்போது சூப்பர் சிங்கர் சீசன் 6ன் பிரம்மாண்ட இறுதி போட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேரியவரிடம் இந்த நிகழ்ச்சியில் நடுவர்களில் யாரை ஜெயில் போடுவீர்கள் என கேட்கப்பட்ட போது அனுராதா ஸ்ரீராமை ஜெயிலில் போடுவேன் என கூறினார்.

காரணம் அவர் ஒல்லியாக இருக்கிறார். ஈசியாக கம்பிவழியே வெளியே வந்து விடுவார் என கூறினார். மேலும் பொன்னம்பலத்தை ஏன் ஜெயிலில் போட்டீர்கள் என கேட்டதற்கு அவர் பெண்களை தவறாக பேசினார் என அனந்த் கூறினார். அத்துடன் பிரியங்காவை மா.கா.பா கேலி செய்தால் அவரை ஜெயிலில் போடுவேன் என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!