சந்தானாம் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் என ஒற்றை காலில் நிற்கின்றார். வரிசையாக படங்கள் தோற்றாலும் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொல்லி வருகின்றார்.
இந்நிலையில் 3 படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் நடித்த ரோலில் சந்தானத்தை நடிக்க வைக்க தான் பேச்சு வார்த்தைகள் நடந்ததாம்.
ஆனால், சந்தானம் முதலில் ஓகே சொல்லிவிட்டு பிறகு மறுத்துவிட்டாராம், இதற்கு முக்கிய காரணம் சிம்பு தானாம்.
ஆம், சிம்பு தான் சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தினார், சிம்பு-தனுஷ் சண்டை அந்த நேரத்தில் உச்சத்தில் இருந்த காரணமாக, அந்த படத்தில் சிம்புவிற்காக சந்தானம் நடிக்க மறுத்தாராம்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!