ஓவியா – ஆரவ் ஜோடிக்கு பிறகு பிக்பாஸ் வீட்டில் இந்த ஜோடிக்கும் காதல்..!!

கடந்த வாரத்தில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. கடந்த சசீனில் ஓவியா ஆரவ்வை காதலித்தது போன்று இந்த சீசனிலும் ஒரு காதல் முளைத்துள்ளது

இரவு 11 மணிக்கு ஷாரிக் ஹஸனும், ஐஸ்வர்யா தத்தாவும் தனியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு உன் குணம் பிடித்திருக்கிறது. நீங்கள் ஜாலியாக இருப்பதால் பிடித்திருக்கிறது. உங்களை பார்த்த உடனேயே பிடித்துவிட்டது என்றார் ஷாரிக்.

யாரோ வருவது போன்று இருந்ததும் இருவரும் இடத்தை காலி செய்துவிட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று பேச்சை துவங்கினார்கள். ஷாரிக் ஒரு ஸ்வீட்ஹார்ட் அவரை இழக்க விரும்பவில்லை.


ஒரு நண்பராக அவர் வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். என் குடும்பத்திற்கு நான் தான் தலைவி. என் குடும்பத்தை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு என்னுடையது. நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை என்று ஐஸ்வர்யா சீரியஸாக பேசினார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வெளியே போய் அடுத்து என்ன என்பதை யோசிக்கலாம். நான் நிறைய இழந்திருக்கிறேன். கெரியரிலும் நிறைய இழந்திருக்கிறேன் என்றார் ஷாரிக். ஷாரிக், ஐஸ்வர்யா ஆகிய இருவருமே சீரியஸாக உள்ளனர்.

கடந்த சீசனில் ஆரவ், ஓவியா இடையே காதல் ஏற்பட்டது. ஆனால் ஆரவ் நைசாக நழுவிவிட்டதால் ஓவியா மனமுடைந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்றார். இந்த சீசன் காதல் எதுவரை செல்கிறது என்று பொறுத்திருந்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!