என்னுடைய உள்ளாடையை கூட விட்டுவைக்கவில்லை..!! கதறி அழுத நடிகையால் பரபரப்பு..!!


தமிழ், தெலுங்கு பல மொழிப்படங்களில் நடித்து வரும் நடிகை மேக்னா நாயுடு. தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி படத்தில் கண்ணு ரெண்டும் ரங்க ராட்டினம் என்ற பாடலில் ஐட்டம் நம்பராக ஆட்டம் போட்டு அசத்தியிருப்பார் இவர்.

இவருக்கு கோவா-வில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை தனக்கு தெரிந்தவர்கள் மூலமாக வாடைகைக்கு விட்டு விடும் படி கூறிவிட்டு மும்பையில் இவர் தங்கிவந்துள்ளார். இதனிடையே, தாங்கள் நியூசிலாந்தில் பணிபுரிவதாகவும், இந்தியா தான் எங்களின் பூர்வீகம் என கூறி ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றை கொடுத்து தாங்கள் கணவன், மனைவி என கூறிக்கொண்டு அந்த வீட்டில் வாடகைக்கு குடியேறியுள்ளனர் இரண்டு நபர்கள்.

அந்த வீட்டில் சுமார் ஒரு வாரம் தங்கியிருந்த அவர்கள் அந்த வீட்டில் ஏற்கனவே இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து நடிகை மேக்னா நாயுடு கூறும் போது, என்னுடைய கட்டில் கபோர்டில் இருந்த என்னுடைய உள்ளாடையை கூட விட்டுவைக்கவில்லை அனைத்தையும் திருடி சென்று விட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தான் அவர்கள் கொடுத்த ஆதார் அட்டை மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவை போலியானவை என்பது தெரியவந்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!