சினிமாவில் நடிகர்கள் இப்படிப்பட்டவர்களா..? நிஜ முகத்திரையை கிழித்த நடிகை ஸ்ரேயா..!!


நடிகை ஸ்ரேயா வளர்ந்தது சம்பாதித்தது எல்லாம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தான். சமீபத்தில், தன்னுடைய காதலரான ரஷ்யாவை சேர்ந்த ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தன்னை வளர்த்துவிட்டு , வாழ வைத்த சினிமா குறித்து சில விஷயங்களை பேசியுள்ளார். அதாவது, சினிமாவில் ஹீரோக்களின் பங்கு மட்டுமே அதிகமாக உள்ளது. நடிகைகளை நடனம் ஆடுவதற்கும், ஹீரோவுடன் ரொமான்ஸ் செய்வதற்கும், கவர்ச்சி உடைகளை அணிய வைத்து அங்கங்களை அழகு பார்க்க மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்பது அம்மணியின் குற்றச்சாட்டு.

ஆண்களின் ஆதிக்கம் சினிமாவில் மிகுந்து காணப்படுகிறது. நடிகைகளை வெறும் கவர்ச்சி பொருளாக மட்டுமே பார்ப்பது வேதனை எனவும், கதையை சொல்லும் போது ஒரு விதமாகவும், எடுக்கும் போது வேறு விதமாகவும் செய்கிறார்கள் இயக்குனர்கள் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள், நடிக்கும் போதே இதனை கூறிவிட்டு சினிமாவிலிருந்து விலகியிருக்க வேண்டியதுதானே. திருமணம் செய்து கொண்டு செட்டிலானபிறகு பகுமானமாக தன்னை வளர்த்து விட்டவர்களையே குறை கூறுவது நியாயமா..? என்று கூறி வருகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!