பாலிவுட் நடிகை மனிஷா ராய் (45), அதிகமாக போஜ்புரி படங்களில் நடித்து வந்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமை படப்பிடிப்பிற்காக, தனது உதவியாளர் சஞ்சீவ் மிஷ்ராவுடன் பைக்கில் சென்றார். உத்தரபிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில் உள்ள சித்தானி கிராமத்திற்கு அருகே சென்றபோது, அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அவர்களின் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயம் அடைந்த நடிகை மனிஷா ராய், சம்பவஇடத்திலேயே இறந்து போனார். உதவியாளர் சஞ்சீவ் மிஸ்ரா பலத்த காயங்களுடன்உயிர் தப்பியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போஜ்புரி கலைஞர்களிடையேமிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் மனிஷாவின் குடும்பத்தாருக்கு தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!