இந்த வருடம் நயன்தாராவுக்கு இப்படியொரு நிலைமையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


தமிழ், தெலுங்கு பட உலகில் நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்திலேயே இருக்கிறது. 2005-ல் ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்து 13 வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். அவருக்கு பிறகு மலையாளம், தெலுங்கு, இந்தியில் இருந்து எத்தனையோ நடிகைகள் கோடம்பாக்கம் வந்து இறங்கியும் நயன்தாரா கோட்டையை அசைக்க முடியவில்லை.

அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து விட்டார். இப்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் காதுகேளாத பெண்ணாகவும், நீ எங்கே என் அன்பே படத்தில் பயங்கரவாத கணவனை கொலை செய்யும் பெண்ணாகவும், அறம் படத்தில் சமூக அவலங்களை சாடும் துணிச்சலான கலெக்டராகவும் திறமை காட்டினார்.


கடந்த வருடத்தில் அவரது நடிப்பில் 3 படங்கள் திரைக்கு வந்தன. இந்த வருடம் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளார். இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, விசுவாசம், தெலுங்கில் சைரா நரசிம்ம ரெட்டி ஆகிய 5 படங்களில் நடித்து வருகிறார். நேற்று சிவகார்த்திகேயன் ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் ஜோடியாக வந்த இவர்கள் மீண்டும் சேர்ந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்க ராஜேஷ்.எம் இயக்குகிறார். சம்பளத்தையும் ரூ.5 கோடியாக உயர்த்தி விட்டார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!