எனக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும்..!! விமர்சனங்களுக்கு பதிலடி..!!


அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், அவர் இதுவரை சமூகத்தில் நடக்கும் பிரச்சனை குறித்து வெளிப்படையாக பேசியது இல்லை.

ஆனால், நடிகர் சங்கம் சார்பில் நடத்தும் அனைத்து போராட்டங்களிலும் அஜித் கலந்துக்கொண்டுள்ளார், கடைசியாக நடந்த காவேரி மௌனப்போராத்தில் இவர் கலந்துக்கொள்ளாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

முன்னணி வார இதழ் ஒன்று அஜித்திற்கு தமிழ் உணர்வு இல்லையா? என்று கூட கேட்டார்கள், இந்நிலையில் அஜித் பல வருடங்களுக்கு முன்பே ஒரு கூட்டத்தில் இது போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில் ‘என்னுடைய உணர்வுகளை நான் வெளிப்படையாக பேசாததால், எனக்கு அக்கறை இல்லை என்று அர்த்தம் கிடையாது, எப்போதும் எனக்கும் தமிழ் உணர்வு உள்ளது’ என்று பதில் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி