படக்குழுவினரிடம் போராடும் வாரிசு நடிகர்..!! எதற்காக இப்படியொரு நிலைமை இவருக்கு..?


பிரபல நடிகர் முரளியின் மகனான அதர்வா சமந்தா நாயகியாக நடித்த பானா காத்தாடி படம் மூலம் திரைக்கு வந்தார். பல வெற்றி படங்கள் இவரை முன்னணி நடிகராக்கியது. தற்போது இவர் செம போத ஆகாத என்ற படத்தை சொந்தமாக தயாரித்து வருகிறார். மேலும், ருக்குமணி வண்டி வருது, இமைக்கா நொடிகள், ஒத்தைக்கு ஒத்த, Boomerang, ஒரு த்ரில்லர் படம் என பல படங்களை கையில் வைத்திருக்கிறார்.

Boomerang படத்தில் இவர் மூன்று வித்யாசமான கதாபாத்திரத்தில் தோன்றுகிறாராம். இவர் மூன்று கதாபாத்திரத்திலும் வித்யாசமான முறையில் காட்ட படக்குழு வேலை செய்து வருகிறதாம்.

அதற்காக இவர் 5 மணிநேரம் ஒரே இடத்தில் அமரவேண்டியது அவசியம் என்பதால் மும்பையில் இருந்து வந்துள்ள மேக் அப் கலைஞர்களுடன் 12 மணிநேரம் வேலை செய்து வருகிறாராம் அதர்வா.

இந்த படத்தின் இயக்குனர் கண்ணன் இதுகுறித்து கூறியதோடு, மேக் அப் வேலைகள் நடக்கும்போது அதர்வா மூச்சு விட கூட கஷ்டப்படுவார் என்றும் கூறினார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி