வாய்ப்பு இல்லாவிட்டால் இதைத்தான் செய்யனும்..!! வருத்தத்தில் பிரபல நடிகை..!!


குத்து சண்டை படத்தில் நடித்து புகழ் பெற்ற அந்த நடிகை கைவசம் பட வாய்ப்புகள் இல்லாமல், வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கிறார். காரணம், பெரிய கதாநாயகர்கள் மற்றும் பெரிய டைரக்டர்கள் யாரும் அந்த நடிகையை கண்டு கொள்ளாததுதான்…

அவர்களை தேடி சென்று வாய்ப்பு கேட்பதை நடிகை கவுரவ குறைவாக கருதுகிறார். “வாய்ப்பு கேட்பதில் தப்பு இல்லை” என்று அவருடைய நண்பர்கள் அறிவுரை சொன்னதை அவர் ஏற்கவில்லை. “வாய்ப்பு வந்தால் நடிக்கலாம். வராவிட்டால், கைவசம் தொழில் (குத்து சண்டை) இருக்கிறது” என்று இரண்டு கை விரல்களையும் இறுக்கமாக மூடி காண்பிக்கிறார், அந்த குத்து சண்டை நடிகை

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி