சினிமா நடிகைகளை விபச்சாரிகளாக்கிய டிவி தொகுப்பாளர்..!! கடும் கண்டனம் தெரிவிக்கும் நடிகர்கள்..!!


பிரபல தெலுங்கு தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ஒருவர் நடிகைகளை அசிங்கமான வார்த்தைகளில், அதாவது அவர்களை விபச்சாரிகள் என்பது போல பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைகளை இழிவாக பேசிய அந்த தொகுப்பாளர் மற்றும் அந்த தொலைககட்சிக்கு எதிராக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களை பலர் முன் வைத்து வருகிறார்கள்.


மேலும், சினிமா நடிகர் நடிகைகளும் அந்த தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, அந்த தொலைக்காட்சியை தடை செய்ய வேண்டும், என்று அரசிடம் கோரிக்கையை வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டிவிட்டரில் கோபமாக கருத்து பதிவிட்டுள்ள பிரபல பாடகி சின்மயி, “2018லும் பெண்கள் சம உரிமைக்காக ஏன் போராடுகிறார்கள் என்பது இப்போது புரிகிறதா” என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி