மீண்டும் சினிமாவில் ஜோடி சேரும் நிஜ தம்பதிகள்..!! வியப்பில் ரசிகர்கள்..!!


சமந்தா – நாக சைதன்யா இருவரும் சேர்ந்து ‘யே மாய சேசவே’, ‘மனம்’ மற்றும் ‘ஆட்டோ நகர் சூர்யா’ ஆகிய தெலுங்குப் படங்களில் நடித்தனர். ஒன்றாக நடித்தபோது இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். இந்தக் காதல், கடந்த வருடம் திருமணத்தில் முடிந்தது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் இவர்களுடைய திருமணம் சிறப்பாக நடைபெற்றது.

2014ஆம் ஆண்டு ரிலீஸான ‘ஆட்டோ நகர் சூர்யா’ படம்தான் இருவரும் கடைசியாக இணைந்து நடித்த படம். அதன்பிறகு எந்தப் படத்திலும் இணைந்து நடிக்காத இவர்கள், மறுபடியும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர்.


இந்த புதிய படத்தை ‘நின்னுகோரி’ படத்தை இயக்கிய ஷிவ நிர்வனா இந்தப் படத்தை இயக்குகிறார். ஷைன் ஸ்கிரீன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

சமந்தா நடிப்பில் தற்போது ‘இரும்புத்திரை’ மற்றும் ‘ரங்கஸ்தலம்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக இருக்கின்றன. அத்துடன், ‘சீமராஜா’, ‘நடிகையர் திலகம்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ மற்றும் ‘யு டர்ன் ரீமேக்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி