பிரபல நடிகரின் பெயருக்கு தன்னுடைய சொத்துகளை உயில் எழுதி வைத்துவிட்டு இறந்த ரசிகை..!!


சினிமா நடிகர்களுக்கு எல்லா காலகட்டங்களிலும் மிகத் தீவிரமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தத் தீவிரம் சமயங்களில் உச்சத்தைத் தொட்டு விடுகிறது.

நடிகர்களுக்கு சிலை வைப்பது, நடிகைகளுக்கு கோவில் கட்டுவது போன்றவையெல்லாம் ரசிகர்கள் அவர்கள் மீது கொண்டுள்ள மிகையான அபிமானத்தால் தான்.

தற்போது, மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மொத்த சொத்துகளையும், தனது விருப்பமான நடிகரான சஞ்சய் தத் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார்.

மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த நிஷி ஹரிச்சந்திரா திரிபாதி என்கிற பெண் நடிகர் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையாம். தனது தாயுடன் வசித்துவந்த இவர் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு சமீபத்தில் காலமானார்.


அவரது வங்கி கணக்கு மற்றும் லாக்கரை ஆய்வு செய்த வங்கி அதிகாரிக்கு, அவர் தனது இருப்பில் உள்ள பணம், லாக்கரில் உள்ள தனது பொருட்கள் அனைத்தும் சஞ்சய் தத்துக்கே சொந்தம் என உயில் எழுதி வைத்திருந்தது தெரிய வர அதிர்ச்சியானாராம்.

சஞ்சய் தத்தை அழைத்து இந்த விவரத்தை சொல்ல, அதையறிந்த சஞ்சய் தத் இப்படி ஒரு ரசிகையா என அதிர்ந்து போய் இருக்கிறார். ரசிகையின் அன்புகண்டு நெகிழ்ந்துபோன சஞ்சய் தத், அந்த ரசிகையின் பணம், பொருட்களை எல்லாம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கே கொடுத்து விடும்படி ஏற்பாடுகளை செய்துவிட்டாராம்.

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பு இருப்பதாக சஞ்சய் தத் கைது செய்யப்பட்டௌ 2016-ம் ஆண்டு தான் வெளிவந்தார். பல சர்ச்சைகள் கடந்தும் இவருக்கு இவ்வளவு தீவிரமான ரசிகை இருந்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி