நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் பிரபலங்கள்..!! ஆழ்ந்த சோகத்தில் திரையுலகம்..!!


தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என திரையுலகில் மிகபெரிய பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. ஒரு திருமணத்திற்காக கணவருடன் பிப்ரவரி 24 ஆம் தேதி துபாய் சென்றார் அங்கு இரவு 11.30 மணியளவில் திடீரென உயிரிழந்துள்ளார் என அவருடைய உறவினர் சஞ்சய் செய்திகள் வெளியிட்டார். ஸ்ரீ தேவி அவர்களது உடல் பிரேத சோதனைக்கு பிறகு, அவர் இறந்ததற்கான உண்மை தகவல் வெளியாகியுள்ளது. குளியலறையில் உள்ள டப்பின் நீரில் மது போதையில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியானது.

நேற்று காலை அவரது உடல் இந்தியா வந்துவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், தாமதமாகி இன்று இந்தியா வரவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது.


மேலும், ஸ்ரீதேவியின் இறப்பிற்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக பல பிரபலங்கள் மும்பை சென்றுள்ளார்கள். ரஜினி நேற்று முன்தினம் மும்பை சென்றுவிட்டார், கமல் நேற்று மாலை மும்பை சென்றார், ஸ்ருதி ஹாசன் தாய் சகிக்கா மற்றும் தங்கை அக்ஷரா ஹாசனுடன் சென்றார்.

மேலும், நடிகை ஜெனிலியா, நக்மா, தபு, ஜெயபிரதா, மாதுரி தீக்ஷித், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், அதைத்தொடர்ந்து, பட தயாரிப்பாளர்கள் கரன் ஜோகர், பரா கான், நடிகர் பரா அக்தர், இயக்குனர் சந்திரா, உற்பட பல சினிமா பிரபலங்கள் ஸ்ரீதேவியிற்காக நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும், மும்பை ஜூகுவில் உள்ள போனி கபூரின் தம்பி அனில் கபூரின் வீட்டிற்கு தான் அனைத்து சினிமா நட்சத்திரங்களும் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி