நடிகர் சூரி இதற்காகவா பணத்தை செலவு செய்கிறார்..!!!


நடிகர் சூரி சினிமாவில் வேகமாக முன்னணி காமெடியன் ஆகிவிட்டார். பரோட்டா காமெடியால் பிரபலமானவர் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனுடன் ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’ என நடித்த படங்களின் காமெடிகள் ஹிட்டாகி விட்டன.

இருவரும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள். படத்தின் காமெடி காட்சிகளுக்கு சில நாட்கள் தான் கால்ஷீட். இதனால், சூரி குறைந்த நாட்களில் அதிக படங்களில் நடித்து விடுகிறார்.


முன்னணி காமெடியன்
வடிவேலு கொஞ்சம் ப்ரேக் எடுத்ததால், தமிழ்த் திரையுலகத்தில் தற்போது இருக்கும் நகைச்சுவை நடிகர்களில் முன்னணியில் இருப்பவர் சூரி. சந்தானம் ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்துவதால் அவரது இடத்தையும் சேர்த்து நிரப்பவேண்டியிருக்கிறது புதிய காமெடியன்களுக்கு.

மதுரையில் ஹோட்டல்
தற்போது புதிதாக ஹோட்டல் ஒன்றை மதுரையில் திறக்க உள்ளார் சூரி. பொதுவாக, நடிகர்கள் மார்க்கெட்டில் இருக்கும் போதே ஏதாவது ஒரு தொழிலைத் தொடங்குவார்கள். மார்க்கெட் போன பிறகு அந்தத் தொழிலை வைத்து வாழ்க்கையை ஓட்டலாம் எனும் முன்னெச்சரிக்கைதான் இதற்குக் காரணம்.

படிக்க வைக்கும் சூரி
சூரி, அவருடைய குடும்பத்தினருக்காக ஹோட்டல் திறக்க உள்ளாராம். மதுரையில் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்கள். அவரது நெருங்கிய உறவினர்களின் குழந்தைகள் பலரையும் சூரி தான் படிக்க வைத்து வருகிறார்.


சிவகார்த்திகேயன்
திறந்து வைக்கிறார் சூரி, இன்று மதுரையில் ஆரம்பிக்க உள்ள ஹோட்டலை நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைக்க உள்ளார். சூரி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்காக மதுரைக்கு வந்து ஹோட்டலைத் திறந்து வைக்க உள்ளார் அவரது நண்பர் சிவகார்த்திகேயன்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!