பிரபல நடிகைக்கு இப்படியொரு சோதனையா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


கடந்த 2011-ஆம் ஆண்டு பிரியங்கா வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எல்.வி.எம்.எச் டேக் வாட்ச், 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டொயேட்டா பைரஸ் கார் ஆகியவற்றுக்கு வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது.

காரும், வாட்சும் நான் சம்பாதித்து வாங்கியது இல்லை பரிசாகப் பெறப்பட்டது என்று வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பிரியங்கா சோப்ரா விளக்கம் அளித்தார். அவற்றுக்கு வரிசெலுத்துமாறு வருமான வரித்துறையினர், நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். பரிசுகளுக்கு வரி செலுத்த முடியாது என பிடிவாதம் பிடித்தார் பிரியங்கா. தற்போது அந்தப் பொருள்களுக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும் என வருமான வரித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி