‘மர்ம தேசம்’ தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ‘திடீர்’ தற்கொலை

தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மர்மதேசம் நெடுந்தொடருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரில் குட்டி ராசுவாக நடித்தவர் லோகேஷ் ராஜேந்திரன். இவர் ‘ஜீ பூம்பா’ என்ற தொடரிலும் நடித்து பிரபலமானார். இவர் நேற்று இரவு சென்னையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 31. அவரது மரணம் திரையுலகினரும், தொலைக்காட்சி துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபகாலமாக இவர் திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் இதற்காக பணம் திரட்டுவதற்காக நண்பர்களிடம் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முயற்சியில் இருக்கும்போதுதான் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது நண்பர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இவர் 10 வருடங்களாக இயக்குனர் நாகாவிடம் சில தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்திருக்கிறார். அதன் பிறகும் சில தொடர்களில் பணியாற்றி வந்தவருக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சோக முடிவை அவர் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.




  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!